ஸ்ரீநகர் நீண்ட காலத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு செப்டம்பர் 18 அன்று நடைபெறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த “இந்தியா” கூட்டணியும், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களைப் பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பி, சட்டமன்ற தேர்தலை புறக்க ணிக்கப்போவதாக காஷ்மீர் பண்டிட்டுகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் பண்டிட்டுகளின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் (பெயரை கூற விரும்பாதவர்) கூறுகையில்,”ஜம்மு-காஷ்மீரில் நாங்கள் பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்த சமூகமாக இருந்து வருகி றோம். அடுத்தடுத்து வந்த அரசுகளும், அரசியல் கட்சிகளும் எங்களை பற்றியோ, எங்களது பிரச்சனைகளை பற்றியோ தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் காஷ்மீர் பண்டிட்களை வைத்து சில கட்சிகள் ஆதாயம் பெற்று வருகின்றன. ஆனால் தேர்தல்களில் தங்களுக்கு என்று பிரதி நிதித்துவம் எதுவும் செய்யவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அவர் கூறினார்.
பாஜகவினர் பேச்சிற்கு பதிலடியா?
ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் காரணமாக சட்டமன்ற தேர்தலில் தங்களு க்கு ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை ஒப்புக்கொண்ட பாஜக இந்துக்களான காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆபத்து உள்ளது என வகுப்புவாத பிரச்சனையை கட்டவிழ்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் காஷ்மீர் பண்டிட்டுகளை மறைமுகமாக மிரட்டி வரு கின்றனர்.
இத்தகைய சூழலில் பாஜகவினரின் அரசியல் ஆதாய பேச்சை நன்கு உணர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் எனக் கூறி அதிர்ச்சி அளித் துள்ளனர். காஷ்மீர் பண்டிட்டுகளின் ஆதரவை வைத்து இதரர்களின் வாக்குகளை பெற பாஜக கணக்குப் போட்டு இருந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அறிவிப்பால் ஜம்மு-காஷ்மீர் பாஜக நிலை குலைந்துள்ளது.